Saturday, December 27, 2014

Missing AirAsia flight ‪#‎AirasiaQZ8501‬ Pray For Allah

It have been a terrified year for Malaysia and some part of the world. Wish all the best for survive one and pray for the lost one. Insha'Allah ‪#‎AirasiaQZ8501‬loses Among 155 passengers are 149 Indonesians, three Koreans, one each from Malaysia, Singapore and UK; 7 crew also on board 

Emergency Call Centre: +622129850801
PETALING JAYA: AirAsia Indonesia has confirmed that Flight ‪#‎QZ8501‬ from Surabaya to Singapore has lost contact with Indonesian air traffic control.
"AirAsia Indonesia regrets to confirm that QZ8501 from Surabaya to Singapore has lost contact at 07:24hrs this morning.

“At the present time we unfortunately have no further information regarding the status of the passengers and crew members on board, but we will keep all parties informed as more information becomes available,” it said in a statement posted on their Facebook page on Sunday.
The aircraft was an Airbus A320-200 with the registration number PK-AXC. AirAsia said that at this time, search and rescue operations are in progress.
AirAsia has also established an Emergency Call Centre that is available for families or friends of those who may have been on board the aircraft. The contact number is: +622129850801.
Flight QZ8501, which took off on Sunday morning from Juanda International Airport lost contact in Indonesian airspace around 7.24am, local time (8.24am Malaysian time).
Earlier, according to Kompas.com, Indonesia’s Air Transport Ministry director Djoko Murjatmojo confirmed that the plane was missing in Indonesian airspace.
“At this moment, I’m at the observation post waiting for reports to come in,” said Djoko.
He said the ministry would come out with a statement with regards to the missing flight.
According to Indonesia’s Metro TV, the flight manifest stated that there were 155 passengers on board.
Out of the number, 138 were adults, 16 children and one infant.
The plane was also carrying two pilots, four cabin crew and one technical staff.
Transport Minister Datuk Seri Liow Tiong Lai confirmed that he had received an alert over the missing flight and was awaiting details.
Civil Aviation Department Director-General Datuk Azharuddin Abdul Rahman also confirmed the incident. ‪#‎TheStar‬

Saturday, November 8, 2014

#Google #smartkani #facebook............


Missing Child

அஸ்ஸலாமுஅலைக்கும் திருச்சி தென்னூர் பகுதியில் வீடு விலையாடிக்கொண்டுருத்த 2.வயது சிருவனை கானவில்லை எங்காவது தென்ப்பட்டால் தகவல் தொடர்ப்புக்கு

தாயின் உணர்வுகளை குழந்தைக்கு ஊட்டும் திறனை கொண்ட தாய்பால்

புரோட்டீன், கால்சியம் சத்துக்கள் கொண்ட தாய்ப்பால், குழந்தையின் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றது. இதில் நிறைய நுண் ஊட்ட சத்துக்கள் இருப்பதால் செரிமான தன்மை அதிகம் உள்ளது. குழந்தையின் உடல் நலத்துக்கு தாய்ப்பால் மிகவும் அவசியமானது என்பது அனைவரும் அறிந்த உண்மை. 

ஆனால் இவை அனைத்துக்கும் மேலாக தாயின் உணர்வலைகளை குழந்தைகளுக்கும் ஊட்டும் திறன் படைத்தது என்ற புதிய தகவல் தெரிய வந்துள்ளது. தாய்பாலின் ‘பிரோமோன்’ என்ற ரசாயன சிக்னல் (சமிக்ஞை) உள்ளது. அது தாயிடம் இருந்து குழந்தைக்கு உணர்வலைகளை கடத்துகிறது. மேலும் குழந்தைகளின் உடல் திறன் வளர்ச்சி அடைய வழி வகுக்கிறது. #Dinankaran

Friday, November 7, 2014

சரியாக தூங்காவிட்டாலும் புற்றுநோய் தாக்கும்!

மனிதன் தினமும் சரியாக தூங்காவிட் டாலும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மனிதன் தோன்றிய காலம் முதல் தற்போது வரை  தூக்கம் என்பது வாழ்வின் இன்றியமையாத ஒன்றாகியுள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதனின் ஒரு நாள் தூக்கம் என்பது 12 மணி  நேரமாக இருந்தது. ஒரு நாளின் 24 மணி நேரத்தில் பகல் 12 மணி நேரம் உழைப்பதற்காவும், இரவு 12 மணி நேரம் உறங்கி ஓய்வெடுப்பதற்காகவும்  பிரிக்கப்பட்டது. ஆனால் கடந்த 100 ஆண்டில் இது முற்றிலுமாக மாறியுள்ளது

இன்றைய மனிதன் குறைந்தபட்சம் 6 மணி நேரமாவது தூங்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால், இதற்கு குறைவான நேரம்  தூங்கும் மனிதர்களுக்கு ரத்தஅழுத்தம், உடல்கொழுப்பு, உடல்பருமன், சர்க்கரை வியாதி உள்ளிட்ட நோய்பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புகள்  உள்ளதாக ஏற்கவே பல்வேறு மருத்துவ ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளொன்றுக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாக  தூங்குபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக சமீபகால ஆய்வுகள் தெரிவித்துள்ளது. குறைந்த நேரம் தூங்குபவர்களில் சுமார் 12 சதவீதம்  பேர் சராசரி வாழ்நாளுக்கு முன்னதாகவே உயிரிழக்கின்றனர்.

இந்த தகவல்கள் அனைத்தும் பிரபல மருத்துவ ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களான ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், ஹாவார்ட், மேன்செஸ்டர் உள்ளிட்ட  பல்கலைக்கழங்கள் நடத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் கூறுகையில், மனித வாழ்வின் சராசரி தூக்கம்  என்பது 8 மணிநேரமாகும். ஆனால், இன்றைய நவீன உலகில் கம்ப்யூட்டர், செல்போன் போன்வற்றிலேயே பெரும்பாலானவர்கள் நேரத்தை  செலவிடுகின்றனர். இதனால் அவர்களின் தூங்கும் நேரம் குறைகிறது. நாளடைவில் அதுவே அவர்களின் வாடிக்கையாகிவிடுகிறது. 

இது அவர்களின் உடல்நலத்தை வெகுவாக பாதித்து, இதயநோய், மனஅழுத்தம், ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.  இது தவிர 6 மணி நேரத்திற்கு குறைவாக தூங்கும் நபரில், சுமார் 2 ஆயிரம் பேரில் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது என்றனர். அதிக  நேரம் தூங்கினாலும் உடல் எடை அதிகரித்து பல்வேறு வியாதிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதேவேளை மிகவும் குறைவான நேரம்  உறங்கினாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும். குறிப்பாக இரவு வேலைக்கு செல்பவர்கள் பகலில் சரிவர தூங்கு வதில்லை. எனவே, சரியான நேரத்தில்  உறங்கி எழுந்து உடல்நலத்தை ஆரோக்கியத்துடன் வைப்போம். 

Copy by Dinamalar 08/11/14 Kani 

Thursday, October 2, 2014

Hitler Kani

Scientists proved that people who takes 6 or more selfies in a day and 
upload them on INTERNET & FACE BOOK 
they’ve serious Mental Disease !!!
- Hitler Kani -






என்ன கொடுமை சார் 
இந்த இணையதளத்தில் தினம் தினம் ஆயிரம் பிரச்சனைகள் 
Don't Worry Be Happy 

ஹிட்லர் கனி 

Don’t Belive in Luck Belive In Hard Work BushraKani

Don’t Belive in Luck
                              Belive In Hard Work
                                                                 - Kani -



Sunday, September 28, 2014

நம்பிக்கை

நம்பிக்கை என்பது   ஒரு நாளில் உதிர்ந்து விடும்  பூவாக இருந்துவிடக் கூடாது. 

மேலும் மேலும் மலரை உருவாக்கும் செடியாக இருக்க வேண்டும்.

- புஷ்ரா கனி - 

படித்ததில் பிடித்தது

பிடித்திருந்தால் பகிருங்கள் சொந்தங்களே!!

ஆஸ்திரேலியாவில் பிரசவத்திற்காக கேதே ஒக் டேவிட் என்ற ஆஸ்திரேலியப் பெண்மனி சிட்னி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். கருத்தரித்து 27 வாரங்களே ஆன நிலையில். அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. குறைந்த எடையில் பிறந்த ஒரு ஆண், ஒரு பெண்.
இரு குழந்தைகளையும் காக்க மருத்துவர்கள் பெரு முயற்சி செய்தனர்.
பெண் குழந்தை உயிர் பிழைத்தது. ஆனால்..
மருத்துவர்கள் கடைசி வரை போராடியும் ஆண் குழந்தையைக் காப்பாற்ற
முடியவில்லை. குழந்தை இறந்துவிட்டதாக தாயிடம் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தாங்கிக் கொள்ள முடியாத, அந்தத் தாய்.. இறந்த குழந்தையை மார்போடு கட்டி அணைத்து அழ ஆரம்பித்து விட்டார்.
தொடர்ந்து இரண்டு மணி நேரம் தன் உடலுடன் குழந்தையை அணைத்துக் கொண்டு அழுதவாறே இருந்தார்.
அப்போது.. குழந்தை மெதுவாக
மூச்சு விடுவதை அந்தத் தாய் உணர்ந்தார். உடன் மருத்துவர்களை அழைத்து குழந்தை மூச்சு விட ஆரம்பித்ததைக் கூறினார்.
மருத்துவர்கள் குழந்தைக்கு அவசர சிகிச்சை அளித்து.. இங்குபேட்டரில் வைத்து..
சகஜ நிலைக்குக் கொண்டு வந்தனர்.சிறிது நேரத்தில் கண் விழித்தது குழந்தை..
அதைப் பார்த்து.. ஆனந்தக்கண்ணீர் விட்ட தாயின் விரல்களை குழந்தை பிடித்துக் கொண்டது. இறந்த குழந்தையை உயிர் பிழைக்க வைத்தது எது..
ஆம்..
அந்த தாயின் அரவணைப்பு..
இப்போது சொல்லுங்கள், உலகத்தில் சிறந்தது தாய்மைதானே

BushraKani

உன்னை நேசிப்பவர்களை...விட்டு 



நீ தூர விலகி செல்ல செல்ல... 




உன் உள்ளம் அவர்களின் நெருங்கி வருமே தவிர


மறந்து விட முடியாது 



அதுதான் அன்பின் சக்தி

என்றும் அன்புடன்  புஷ்ரா கனி 

Friday, September 26, 2014

The Silent Killer Blood pressure

ஹெல்த்

பி.பி. (Blood pressure) என்ற  வார்த்தையைக் கேட்டாலே பி.பி. ஏறுகிற அளவுக்கு இன்றைக்கு மிகப் பெரிய பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது பி.பி. என்கிற ‘ரத்த அழுத்த நோய்’ அல்லது ‘ரத்தக் கொதிப்பு’. கடந்த ஐம்பது ஆண்டுகளாக நம் நாட்டில் ரத்தமிகு அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலானோருக்கு தங்களுக்கு ரத்தமிகு அழுத்த நோய் உள்ளது என்ற உண்மை தெரியாது என்பது தான் மிகப்பெரிய சோகம்.

டயபடீஸ் என்று சொல்லப்படுகிற நீரிழிவுக்கு இணையாக இன்றைக்கு பெரும்பாலானவர்களைப் பீடித்திருக்கிறது இந்த பி.பி. இது பற்றி விழிப்புணர்வு இல்லாமலே இந்நோய்க்கு பலியாகிறார்கள் பாமர மக்கள். இத்தனைக்கும் புற்றுநோய் போன்ற கொடிய நோய் அல்ல இது. முறையான உணவுப்பழக்கம் மற்றும் தவறாமல் மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு வந்தால் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நீடூழி வாழ முடியும்.தேவை ‘ரத்த அழுத்த நோய்’ குறித்த விழிப்புணர்ச்சிதான்.

ரத்த அழுத்தம் என்றால் என்ன? அது கூடினாலோ, குறைந்தாலோ என்ன செய்யும்?

எல்லா சந்தேகங்களுக்கும் பதிலளிக்கிறார் பொது மருத்து வரும், ஆதரவு சிகிச்சை நிபுணருமான ரிபப்ளிகா.ஒவ்வொரு முறையும் இதயம் சுருங்கி விரிந்து ரத்தத்தை உடலின் எல்லா பாகங்களுக்கும் அனுப்புகிறது. இதயம் இயங்கும்போது குழாய்களில் உள்ள ரத்தம் அவற்றின் உள்பகுதியில் ஒருவகையான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதைத்தான் ரத்த அழுத்தம் என்று சொல்கிறோம். ஆரோக்கியமாக இருக்கும் ஒரு மனிதனின் ரத்த அழுத்தம் 120/80 mmHg என்ற அளவில் இருப்பதுதான் இயல்பான நிலை.

ரத்த நாளங்களில் உள்ள ரத்த அழுத்தம் தேவையைவிட மிக அதிகமாக உயர்ந்திருப்பதை ‘ரத்த அழுத்த நோய்’ அல்லது ‘ரத்தக் கொதிப்பு’ என்கிறோம். இதைக் கண்டுபிடித்து குணப்படுத்தாவிட்டால் ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும். பொதுவாக இந்நோய் வெளியே தெரியாது.  சில வேளைகளில் மிகப் பெரிய பாதிப்பை அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய பிறகே கண்டு பிடிக்கப்படும்.  எனவே, இதனை ‘சைலன்ட் கில்லர்’ என்றும் சொல்லலாம்.

இதயம் ஒவ்வொருமுறை சுருங்கி விரியும்போதும் ரத்தக்குழாய்களில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த அழுத்தம் இரண்டு வகைப்படும். அதாவது, இதயம் சுருங்கும் போது ஒருவகையான அழுத்தத்தையும் விரியும்போது ஒரு வகையான அழுத்தத்தையும் ரத்தக் குழாய்களில் ஏற்படுத்துகிறது. இதயம் சுருங்கும்போது உண்டாகும் அழுத்தத்தை சுருங்கழுத்தம் (Systolic Pressure) என்றும் இதயம் விரிவடையும்போது ஏற்படும் அழுத்தத்தை விரிவழுத்தம் (Diastalic Pressure) என்றும் இரண்டு வகைகளாகப் பிரித்துள்ளனர். 120/80 என்பதில், 120 என்ற அளவு சுருங்கழுத்தத்தையும் 80 என்ற அளவு விரிவழுத்தத்தையும் குறிக்கிறது. ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவுக்கு மேல் இருக்கும் நிலையைத்தான் ரத்தமிகு அழுத்த நிலை (Hypertension) எனப்படுகிறது.

ஏன் வருகிறது?

90 சதவிகிதம் பேருக்கு காரணம் ஏதுமின்றி ரத்த அழுத்தம் வருகிறது.  மீதமுள்ள 10 சதவிகிதம் பேர் சிறுநீரகங்களில் பாதிப்பு, நாளமில்லாச் சுரப்பிகள், மூளை மற்ற காரணங்களினாலும் ரத்தக் கொதிப்பு நோய்க்கு ஆளாகிறார்கள்.  இது தவிர சிலருக்குத் தற்காலிக ரத்த அழுத்தம் வரலாம். மனநிலையில் ஏற்படுகிற மாறுதல்கள், ஓய்வு நிலை, கர்ப்ப காலம் என இதன் பின்னணி யில் பல காரணங்கள் இருக்கலாம். வயதானவர்களுக்கும் நீரிழிவு, பருமனால் பாதிக்கப்பட்டோருக்கும் ரொம்பவும் மன அழுத்தம் தருகிற வேலையில் ஈடுபடுவோருக்கும் இந்த ரத்த அழுத்தமானது நிரந்தரமாகத் தங்கி விடுவதும் உண்டு.

என்னென்ன பரிசோதனைகள்?


சிறுநீர் பரிசோதனை அவசியப்படும். இதன் மூலம் சிறுநீரகங்கள் பழுதடைந்துள்ளனவா என்பதை ஓரளவு அறியலாம்.  ரத்தத்தில் சர்க்கரை நோயும் ரத்த அழுத்தமும் சேர்ந்து இருந்தால் மாரடைப்பு உள்ளிட்ட வேறு சில நோய்களும் வரும் வாய்ப்புகள் அதிகம். தேவையைப் பொறுத்து இசிஜி, எக்கோ, ஆஞ்சியோகிராம் போன்றவையும் பரிந்துரைக்கப்படும்.

கட்டுப்படுத்த என்ன வழி?

உணவில் உப்பைக் குறைப்பதே முதல் அறிவுரை.
உப்பு அதிகமுள்ள ஊறுகாய், கருவாடு, அப்பளம், சிப்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். உப்பானது, உடலில் நீரை தங்கச் செய்து இதயத்தை பலமிழக்கச் செய்யும்.  கை, கால்களை வீங்கச் செய்யும். 

கொழுப்பு அதிகமுள்ள வெண்ணெய், நெய், எண்ணெய், இனிப்பு, சாக்லெட், ஐஸ்க்ரீம், க்ரீம், சீஸ் போன்றவற்றைத் தவிர்க்கவும்.  உடற்பயிற்சியைத் தவறவிடக் கூடாது.  ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது வேகமாக நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இது உடலில் கொழுப்புச் சத்து சேர்வதைத் தவிர்த்து விடுவதுடன் ரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

புகை மற்றும் மதுப்  பழக்கங்களுக்கு உடனடி யாக விடை கொடுக்க வேண்டும். இந்த இரண்டு பழக்கங்களும் ரத்த அழுத்தத்தை அதிகரித்து, மாரடைப்புக்குக் காரணமாகலாம். ஜாக்கிரதை! 

எந்த நோய்க்குமே சுய மருத்துவம் என்பது தவறு. குறிப்பாக ரத்த அழுத்தப் பிரச்னைக்கு  நீங்களாக மருந்து வாங்கி சாப்பிடுவது உயிருடன் விளையாடுவதற்கு சமமானது. மருத்துவரின் ஆலோசனையின்றி அவர் சிபாரிசு செய்யும் மருந்துகளின் அளவை நீங்களாகவே குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ கூடாது.  ஒரு முறை எழுதிக் கொடுத்த மருந்தை வாழ்நாள் முழுவதும் உபயோகிக்கக் கூடாது. அடிக்கடி மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று தேவைக்கு ஏற்ப மருந்துகளை அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்ய வேண்டும்.

ரத்த அழுத்தத்தின் அளவை அவ்வப்போது முறையாக பரிசோதிக்க வேண்டும்.  பரபரப்பான வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளுங்கள். மனதுக்கும் உடலுக்கும் போதுமான ஓய்வு கொடுங்கள்.  ரத்த அழுத்த நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிட்டால் அது  மாரடைப்பு, மூளை பாதிப்புகளை ஏற்படுத்தி, உயிரிழக்கச் செய்யலாம்.

எவ்வளவு இருக்க வேண்டும்?

இயல்பு நிலையில் இதயத்தின் சுருங்கிய அழுத்தம் 120 mmHg ஆகவும் இதயத்தின் விரிந்த இயக்க அழுத்தம் 80 mmHg ஆகவும் இருக்க வேண்டும். அதாவது, 120/80 mmHg என்றிருக்க வேண்டும். ஆனால், 140/90 mmHg க்கு அதிகமாக ரத்த அழுத்த அளவீடு இருக்குமானால் அது உயர் ரத்த அழுத்தமாகும். இதையே ஹைப்பர் டென்ஷன் என்கிறோம்.

 நன்றி தினகரன் பத்திரிகை 
                                                     Kani

பேசும் முறைகள்...

பேசும் முறைகள்...

தாயிடம் - அன்பாக பேசுங்கள்..!
தந்தையுடன் - பண்பாக பேசுங்கள்..!
ஆசிரியரிடம் - அடக்கமாக பேசுங்கள்..!
துணைவியுடன் - உண்மையாக பேசுங்கள்..!
சகோதரனிடம் - பாசத்தோடு பேசுங்கள்..!
சகோதரியிடம் - அளவாக பேசுங்கள்..!
குழந்தைகளிடம் - ஆர்வத்தோடு பேசுங்கள்..!
உறவினர்களிடம் - பரிவோடு பேசுங்கள்..!
நண்பர்களிடம் - உரிமையோடு பேசுங்கள்..!
அதிகாரியிடம் - பணிவோடு பேசுங்கள்..!
வியாபாரியிடம் - கறாராக பேசுங்கள்..!
வாடிக்கையாளரிடம் - நேர்மையாக பேசுங்கள்..!
தொழிலாளரிடம் - மனிதநேயத்தோடு பேசுங்கள்..!
அரசியல்வாதியிடம் - ஜாக்கிரதையாக பேசுங்கள்..
என்னிடம் அன்பாக பேசுங்கள்
என்றும் அன்புடன் உங்கள் கனி 

Delhi Zoo - Black Day

http://www.youtube.com/watch?v=1q232FArcmQ

சில நாட்கள் ஏன்தான் உதிக்கிறதோ என்று தோன்றும்.அந்த லிஸ்ட்டில் தான் கடந்த 23ம் தேதியும் சேர்ந்திருக்கிறது.
..
எல்லாரையும் பதை பதைக்க வைத்திருக்கிறது டில்லி உயிரியல் பூங்கா.அந்த 15 நிமிட வீடியோ காட்சி நம் கண் முன்னேயே நிழலாடுகிறது.
..
மெக்சூத் என்ற அந்த வாலிபர், 10 நிமிடமாக, விஜய் என்று பெயரிடப்பட்ட வெள்ளைப் புலியைக் கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டிருந்த காட்சி பார்க்கிற எல்லோரையும் கண்ணீர் வர வைத்துவிடும்.
..
அந்த வாலிபன் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் என்று முதலில் சொல்லப்பட்டது.
..
இன்று, அந்த வாலிபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், இரண்டு முறை அந்த வாலிபர் புலி இருக்கும் இடத்தில் குதிக்க முயற்சித்ததாகவும், ஆனால் பூங்கா பாதுகாவலர்களால் தடுக்கப்பட்டார் என்றும், அதன் பின்னர் பாதுகாவலர்களின் கண்களை மறைத்து, அந்த வாலிபர் உள்ளே குதித்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.
..
இதில் பல்வேறு கேள்விகள் எழும்புகிறது.
..
1.மன நிலை பாதிக்கப்பட்டவர் என்றால் அவரோடு அவரது நண்பர்கள் எப்படி வந்தார்கள்?

2.மன நிலை பாதிக்கப்பட்டவர் பள்ளி சீருடை அணிந்திருந்தது ஏன்?

3.இரண்டு முறை கீழே குதிக்க இருந்த அந்த வாலிபனைத் தடுத்த பாதுகாவலர்கள், ஏன் அந்த வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தவோ அல்லது காவல்துறையிடமோ ஒப்படைக்க முன் வர வில்லை?

4.உடன் வந்த நண்பர்களும் ஏன் அவரை அங்கிருந்து அகற்றுவதற்கு முயற்சிக்கவில்லை?
..
கேள்விகள்..கேள்விகள்..எங்கெங்கும் விடையில்லாக் கேள்விகள்.
..
சரி..இந்தக் கேள்விகளால் தான் என்ன பயன்? இந்தக் கேள்விகளுக்கு விடையளித்துவிட்டால் மட்டும் அந்த வாலிபன் மீண்டு வரப் போகிறாரா?
..
இல்லை..இல்லவேயில்லை.
..
ஆனால் இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு, இரவு தூக்கம் இல்லாமல் தவிக்கும் அந்த அர்த்த ராத்திரியில் ஒரே ஒரு கேள்விதான் என் மனதில் நின்றது.
..
அது –
..
கற்றலினால் ஆன பயன் என்ன?
..
எதை எதையெல்லாமோ படிக்கிறோம்..பட்டங்கள் வாங்குகிறோம்..கல்வியாளர் என்று அழைக்கப்படுகிறோம்..அறிவாளிகள் என்று போற்றப்படுகிறோம்..விஞ்ஞானிகள் என்று மதிக்கப்படுகிறோம்..டாக்டர்கள் என்று கெளரவிக்கப்படுகிறோம்.
எல்லாம் சரிதான்.
..
ஆனால்..கற்றலினால் ஆன பயன் தான் என்ன?
ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..
..
ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டேயிருக்கும் பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள் யாருக்கும் நம் கல்வி கற்றுக்கொடுக்கவேயில்லையே..
..
அலெக்ஸாண்டரின் குதிரையின் பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
ஆப்பிரிக்காவில் தங்கம் எந்த இடத்தில் கிடைக்கிறது? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
கெளதம புத்தரின் இயற்பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம்.

..
ஆனால் ஆபத்து நேரத்தில் எப்படி செயல்படுவது என்பதை அறிந்து வைத்திருக்கிறோமா?
..
அந்த வாலிபன், அந்த இடத்தில் அமைதியாய் எழும்பி நின்றிருந்தால் அந்தப் புலி ஒருவேளை தன் உயரத்தை விட வளர்த்தியாய் இருக்கிறானே..இவனை எப்படி எதிர் கொள்வது என்று அமைதியாகத் திரும்பிப் போயிருந்திருக்கும்.
ஏனென்றால் அது பசியினால் அவனைத் தாக்கவில்லை. அப்படித் தாக்கியிருந்தால் அவன் சரீரத்தை அங்கு விட்டு விட்டுப் போயிருக்காது. அதுமாத்திரமல்ல..10 நிமிடங்கள் அவனை அப்படியே பார்த்துக்கொண்டேயிருக்கிறது. தாக்க முனையவேயில்லை.
..
ஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த உடன்..அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது. பார்வையாளர்கள் விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள். கூச்சலிடுகிறார்கள்.
..
அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது.
இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
..
காரணம்..அறிவின்மை.. என்ன செய்வது என்கிற அறிவின்மை.
மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்கு பயப்படும்.
..
கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில் யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால் புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும்.
..
இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல் (a+b)2 =a2 + 2ab + b2 என்று கற்றுக் கொண்ட வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்?
..
ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை..மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்.. அது முதலையாக இருக்கலாம்..சிங்கமாக இருக்கலாம்.. அல்லது.. யானையாக இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன்?
..
அந்த விலங்குகளின் கண்களை நம் கை முஷ்டியினால் பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால் அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன் கண்களில் தூவினால் போதும் அவை அந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான் முயற்சிக்கும்.
..
இந்த அறிவைக்கூடக் கற்றுக்கொடுக்காமல்.. பட்டங்கள் என்ன.. சட்டங்கள் என்ன.. பல்கலைக் கழகங்கள் என்ன?
..
தென்னாப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் என்ன தோண்டியெடுக்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதை விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள்.
..
மற்றவர்களை மதிப்பது எப்படி.. மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி? சாலை விதிகள் என்ன? ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்? அடிப்படைச் சட்டங்கள் என்ன? நமக்கான உரிமைகள் என்ன? காவல் நிலையங்களை எப்படி அணுகுவது?
..
விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது? விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது? மாரடைப்பு வந்தால் என்ன செய்வது? நோய்களை எவ்வாறு கண்டறிவது? எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..பின் விளைவுகள் உள்ளவை?
..
மற்றவர்களை நேசிப்பது எப்படி? நேர்மையாய் இருப்பது எப்படி?
..
இவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால் ஆன பயன் தான் என்ன?
..
இது எதையுமே தெரிந்து கொள்ளாமல்..இனித் தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பில்லாமல் துடி துடித்து மரித்துப் போன இந்திய இளைஞனே.. ஒரு ஆசிரியனாய் நான் வெட்கப்படுகிறேன்
..
ஒரு வெண் புலி, உன் வாழ்க்கையை இருளாக்கிவிட்டது.
..
மெக்சூத்தே.. இளம் வாலிபனே-
..



 எங்களை மன்னித்து விடு..!நீ கஷ்டப்படும் போது  உனக்கு உதவிக்கு யாரும்  வரவில்லை ...

நண்பர்களை இனி இப்படி ஒரு  ஆபத்து யாருக்காவது  வந்தால் தயவு செய்து உதவி செய்யுங்கள்  புகை படம் எடுகாதிங்கள்  - நான் உங்கள் நண்பன் - கனி -

Wednesday, September 3, 2014

Tuesday, August 19, 2014

Hijab... Is... Beautiful

Ma'Sha'Allah














          Hijab... Is... Beautiful

                                       Bushra Kani 

Tuesday, June 17, 2014

மூளைச்சாவு அடைந்தவரின் இருதயம் இளம்பெண்ணுக்கு பொருத்தப்பட்டது! (படங்கள்)

Posted Date : 07:46 (17/06/2014)Last updated : 11:57 (17/06/2014)
சென்னை: விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இருதயம் 13 நிமிடத்தில் கொண்டு செல்லப்பட்டு இளம் பெண்ணுக்கு பொருத்தப்பட்டது.

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள பழையனூரை சேர்ந்தவர் ராஜலெட்சுமி. கிராம சுகாதார செவிலியராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் லோகநாதன் (வயது 27). இவர் என்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். வேலை கிடைக்கும் வரை வருமானத்திற்காக டிரைவர் வேலை செய்துவந்தார்.

கடந்த 11 ஆம் தேதி லோகநாதன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, பட்டாளம் என்ற பகுதியில் டேங்கர் லாரி மோதியதில் படுகாயம் அடைந்தார். உடனே அவர் செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், நேற்று காலை 6.55 மணிக்கு லோகநாதன் மூளைச்சாவு அடைந்தார்.

இதனையடுத்து அவருடைய உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானம் செய்ய முடிவெடுத்தனர். மும்பையை சேர்ந்த ஓய்வுபெற்ற கப்பல் என்ஜினீயர் அஸ்பி வினோகர் நேம்ஜி என்பவரின் மகள் ஹவோபியா (21) சில ஆண்டுகளாக இருதய நோயால் அவதிப்பட்டு அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஹவோபியாவிற்கு இருதய தானம் பெறுவதற்காக அவருடைய குடும்பத்தினர் எதிர் நோக்கியிருந்தனர்.

லோகநாதனின் இருதயத்தை ஹவோபியாவிற்கு வழங்க முடிவானது. இருதயத்தை விரைவாக கொண்டு செல்வது குறித்து டாக்டர்கள் போலீசாருடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் நேற்று மதியம் 2 மணிக்கு லோகநாதனின் உடல் உறுப்புகள் அரசு மருத்துவமனையில் பிரித்து எடுக்கப்பட்டது. இதில் 20 டாக்டர்கள் ஈடுபட்டனர். மாலை 5.35 மணி அளவில் லோகநாதனின் உடலில் இருந்து இருதயம் பிரித்தெடுக்கப்பட்டது.

மாலை 5.45 மணி அளவில் அரசு மருத்துவமனை வளாகத்திலிருந்து மின்னல் வேகத்தில் இருதயம் ஆம்புலன்சு மூலம் அடையாறு மலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 'சென்னையில் ஒரு நாள்' பட பாணியில் வழியெங்கும் போக்குவரத்து போலீசார் நின்று வயர்லெஸ் மூலம் போக்குவரத்தை சீர்படுத்தினர்.

ஆம்புலன்சு செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு சரியாக 13 நிமிடம் 22 வினாடிகளில் மலர் மருத்துவமனையை அடைந்தது. அங்கு டாக்டர்கள் குழுவினர் இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் ஹவோபியாவிற்கு பொருத்தினர்.

லோகநாதனின் 2 கண்கள் எழும்பூர் கண் மருத்துவமனைக்கும், 2 சிறுநீரகங்கள் அடையாறு மலர் மருத்துவமனைக்கும், கல்லீரல் வேலூர் அரசு மருத்துவமனைக்கும், தோல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள ரைட் மருத்துவமனைக்கும் தானமாக கொடுக்கப்பட்டது. லோகநாதன் உடல் உறுப்புகள் மூலம் 7 பேர் மீண்டும் மறுவாழ்வு பெற முடியும்.

இது குறித்து லோகநாதனின் தாயார் ராஜலெட்சுமி கூறும்போது, "என் மகனை காப்பாற்ற முடியாது என்று டாக்டர்கள் கூறியதும் இடி விழுந்தது போல் இருந்தது. அவன் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் அவனை நேரில் காணமுடியும் என்று கருதினேன். எனவே, அவனது உடல் உறுப்புகளை தானமாக கொடுப்பதற்கு முன்வந்தேன். என்னுடைய மகன் உடல் உறுப்புகள் மூலம் மற்றவர்கள் உயிர்வாழ வேண்டும்" என்றார்.

2008 ஆம் ஆண்டு மூளைச்சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்தியது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை 76 இருதயங்கள், 861 சிறுநீரகங்கள், 37 நுரையீரல்கள், 1 கணையம், 500 இதய வால்வுகள், 730 கண்கள் மற்றும் 1 தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டுள்ளன.

இதில் 611 சிறுநீரகங்கள், 378 கல்லீரல்கள், 66 இதயங்கள், 28 நுரையீரல்கள் சென்னையில் தானமாக பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் தான் உடல் உறுப்புகள் தானம் செய்வதில் முதலிடத்தில் உள்ளது.
லோகநாதனின் இருதயம் வெற்றிகரமாக இளம்பெண் ஹவோபியாவுக்கு பொருத்தப்பட்டதாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், ''மாற்று இருதயம் பொருத்தப்பட்ட ஹவோபியா நலமுடன் உள்ளார்.

15 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு, மாற்று இருதயம் பொருத்தும் சிகிச்சையை செய்தது. மாற்று இருதயம் பொருத்தப்பட்ட பெண் இன்னும் 5 நாட்களுக்கு ஐ.சி.யூ.வில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பார். விரைவில் ஹவோபியா நலமுடன் வீடு திரும்புவார்" என்றனர்.

Tuesday, June 10, 2014

வெளிநாட்டு வாழ்க்கை

வெளிநாட்டு வாழ்க்கை


தினார்கும் ரியாலுக்கும் ரிங்கிட்டுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கிக் கிடக்கும் மீன் குஞ்சுகள் நாங்கள்......

பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு
குதூகளிக்க முடியாமல் தங்களின் வாழ்த்துக்களை மனம் முழுக்க சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிட்டு கொஞ்சி மகிழ நேரில் இல்லாத காற்றலைகள் நாங்கள்......


இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம் தன் பெற்றக்குழந்தையை நெஞ்சுருகக் கட்டித்தழுவ முடியாதொரு துர்பாக்கியசாலிகள் நாங்கள்...

கம்ப்யூட்டர் , ஸ்கைப். போனிலும் சொந்த பந்தங்களின் குரல் கேட்டு கேட்டு எங்கள் பாசம் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது... தொலைதூர பாசம் செய்தே/காட்டியே தொலைந்து போனவர்கள் நாங்கள்...

நான் இங்கே நல்லா இருக்கேன். என்று எப்போதும் சொல்லும் இயற்கை நிலை குரலுக்கு சொந்தக்காரர்கள் நாங்கள்...

வியர்வையில் நாங்கள் வேலை செய்து துவண்டாலும் விடுமுறையில் ஊருக்கு போகும் முன் சென்ட் வாசனை திரவியங்கள் வாங்க மறப்பதில்லை நாங்கள்...(எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க...)

உனக்கென்ன! விமானப்பயணம், வெளிநாட்டு ராஜ வாழ்க்கை என்று ஊருக்கு போனதும் உள்ளூர் வாசிகள் எங்களை பார்த்து விடும் பெருமூச்சு வளைகுடா நாட்டின் அரபி நாட்டு வெப்பத்தை விட சற்று அதிகமாகவே சுடுகிறது! (இவர்கள் பேச்சி)
வெளிநாட்டு மூட்டை பூஜ்ஜி கடியை விட இவர்கள் கடியைதான் தாங்க முடியவில்லை
கம்ப்யிட்டர்க்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள்,
நாங்கள் கலப்பை பிடிக்கவில்லை ஆனால் நாங்களும்
களைத்துத்தான் போகிறோம்...


எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள்...
வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள் நாங்கள்...
திரைகடலோடி திரவியம் தேடும் திசைமாறிய பறவைகள் நாங்கள்...


ஆரம்பத்தில் முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதப்பட்டோம் எங்களுக்கே தெரியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு செய்திருக்கின்றோம்...இப்போதுதான் புரியத்துவங்கியது சேர்ந்தே நரைக்கவும் துவங்கியது...

நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை! வாலிபத்தை!!
இழப்பீடு கிடைக்காத இழப்பு இது , நஷ்ட்டஈடு கிடைக்காத நஷ்ட்டம் இது...


, அப்பாவின் அன்பு, குழந்தையின் மழலை, நண்பர்களுடன் அரட்டை இப்படி வீட்டு சாப்பாட்டுக்கு ஏங்கி தவிக்கும் எங்கள் நாக்கு

இங்க உள்ள பர்கர், பீசா, சன்விஜ், சாப்பிட்டு சாபிட்டு எங்கள் நக்கும் செத்து போச்சி பசி கொடுமைக்காக சாப்பிடுக்றோம்.

ஏதோ எங்கள் உடம்பில் கொஞ்சம் ஓட்டி கொண்டு இருக்கும் ரெத்தத்தை கூட மூட்டை பூச்சி குடித்து விடுகிறது .

எத்தனையோ இழந்தோம்.....
எல்லாவற்றையும் இழந்த நாங்கள் இன்னும் இங்கே ஏன் இருக்கின்றோம்...


இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதாலா?
இல்லை இழப்பிலும் சுகம் கண்டுகொண்டதாலா?"


சொந்த மண்ணில் சொந்தங்களோடு சோறு திண்பவன்
......யாரடா ? இருந்தால் அவனே சொர்க்கம் கண்டவனடா!


உங்கள் விரல் தொடும் தூரத்தில் நான் இல்லை என்றாலும் !' உங்கள் மனம் தொடும் தூரத்தில் நான் இருப்பேன் !

நீங்கள் இருப்பது தொலைவில் தான் ஆனால் என் இதயம் மட்டும் உங்களுடன் பேசிக்கொண்டிருகின்றது!

                                                    -   புஷ்ரா கனி - 

Thursday, June 5, 2014

Follow this Rule's

இந்த ஐந்து வீதிகள Follow பண்ணா கல்யாணம் ஒரு அருமையான விஷயம் 

முதல் வீதி ....First rule ...

அதிகாரத்தில் கை வைக்க கூடாது 
"No power of the house"
வரவு செலவு எல்லாத்தையும் அவங்களயே பாக்க விட்ரனும் 
நாம பாத்தா நமக்கு தான் தேவை இல்லாத Tension

Second Rule ...

அடிப்பெனு மிரட்ட கூடாது
"No unwanted scaring"

ஏன்னா காலம் காலமா பொண்ணுங்க Kovai Sarala படம் பார்த்து தெளிவா இருக்காங்க , அவங்கள தேவை இல்லாம அடிப்பெனு சொல்லி அடி வாங்கிக்க கூடாது

Third rule ...

அவங்களால என்ன சமைக்க முடியுமோ அத சமைக்க சொல்லி சாப்புடனும்
நாம அதுக்கு மேல கேட்டா அவங்க சமையல் குறிப்புக்கு Internet போவாங்க , அப்புறம் அதை நாம தான் சாப்புடனும்

And 4'வது Rule ....

எக்காரணம் கொண்டும் ஆயுதம் எந்தக் கூடாது ..No weapons ...
ஏன்னா பெண்கள் கிட்ட தான் கரண்டி பூரி கட்டை போன்ற
பயங்கர ஆயுதங்கள் இருக்குனு Statistics சொல்லுது

And then 5th ...இது தான் ரொம்ப முக்கியாமனது
...

ஒரு வேல சண்டை வந்தா தப்பு அவங்க மேலே இருந்தாலும்
கூச்சமே படாம Sorry கேட்ரனும் ...
மானம் ரோசம் அறவே கூடாது .

Thursday, March 27, 2014

வெளிநாட்டில் வாழ்க்கை


அன்பு காட்ட அம்மா உண்டு

மனம் விட்டு பேச மனைவி உண்டு 

அறிவுரை சொல்ல அப்பா உண்டு 

உரிமை கொள்ள உடன் பிறந்தவர் உண்டு 

தோல் கொடுக்க தோழன் உண்டு 

உதவி செய்ய சொந்தங்கள் உண்டு 

தேடி தேடி தவிக்கிறேன் நம் நாட்டில் - வேலை வாய்ப்பை


அந்த வேலை இல்ல காரணத்தால் தவிக்கிறேன் வெளிநாட்டில் 


இத்தனை அன்புகள் இருக்கும் போது 

வாழ்-கிறேன் தனியாக வெளிநாட்டில்
 
பணம் என்னும் காகிதம் இல்லாததால் 

தினம் தினம் உங்களை நான் தவறவிடுகிறேன்


என்றும் அன்புடன் உங்கள் கனி