Saturday, September 5, 2015

குழந்தை வளர்சியில் சரியும்... தவறும்...!

குழந்தை வளர்சியில் சரியும்... தவறும்...!
1. குழந்தை அழுதால் மட்டுமே சாப்பாடு கொடுக்கும் வழக்கம் சிலருக்கு உண்டு. இது தவறு. குழந்தையின் பசி அறிந்து உணவளிக்க வேண்டும். இல்லை எனில், குழந்தைக்கு, 'நம்மை யாரும் கவனிக்கவில்லை’ என்ற எண்ணம் வந்துவிடும்.
2. குழந்தை கேட்பதை எல்லாம் வாங்கிக்கொடுப்பதோ, எதையும் வாங்கிக்கொடுக்காமல் ஏக்கத்தில் விடுவதோ தவறு. குழந்தைக்கு எது தேவையோ, அதைச் செய்ய வேண்டும்.
3. குழந்தைக்கு என்று தனியாக உணவு கொடுத்து, அதைச் சாப்பிடும்படி கட்டாயப்படுத்தக் கூடாது. குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடப் பழக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களைப் பார்த்துதான் குழந்தை கற்றுக்கொள்ளும்.
4. குழந்தை அடம்பிடிக்கிறது என்பதற்காக சாக்லெட், ஜங்க் ஃபுட் கொடுத்து பழக்கக் கூடாது.
5. குழந்தை முன்னிலையில் சோகத்துடனோ கவலை தோய்ந்த முகத்துடனோ இருக்கக் கூடாது. இவை குழந்தையைப் பாதிக்கும்.
6. டி.வி.யில் வன்முறைக் காட்சிகள், பாலியல் ரீதியான காட்சிகளைப் பார்ப்பதைத் தடுப்பது அவசியம். அவர்களுக்கு அதைப் பற்றித் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும்கூட மனதில் ஆழமாகப் பதிந்துவிடும்.
தேவையில்லாத வயதில் தேவையில்லாத தகவல் குழந்தையின் மூளையில் பதிவது ஆபத்து.
உங்க பாப்பாவைப் பத்திரமாப் பார்த்துக்கங்க
                                                                                                                                                    By Kani

Shame Shame Shame Humanity Washed Ashore

துருக்கி கடற்கைரையில் அய்லான் குர்டி  என்ற மூன்று வயது சிறுவன் உடல்  கண்டெடுக்கப்பட்டது உலகையே அதிர்ச்சி அடைய செய்த நிலையில், கீரிசுக்கு செல்லும் வழியில் படகு நீரில் முழ்கும் போது , தனது கையில் இருந்து எனது மகன் அல்யானை நழுவ விட்டுவிட்டேன் என சிறுவனின் தந்தை உருக்கமாக தெரிவித்துள்ளார். 

சிரியாவில் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருவதால், சிரியாவில் உள்லவர்கள் அண்டை நாடான துருக்கி வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்று கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அகதிகள் பிரச்சினையை ஐரோப்பிய நாடுகள் தீராத தலைவலியாக கருதுகின்றன.இந்த நிலையில்தான் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள கோபானி நகரில் உள்நாட்டுப் போருக்கு பயந்து, உயிர் பிழைப்பதற்காக ஏராளமானோர் கடந்த ஆண்டு துருக்கிக்கு சென்றனர். அங்கிருந்து அவர்கள் படகுகள் மூலமாக பாதுகாப்பற்ற பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர்.

அப்படி துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டின் மோஸ் தீவுக்கு 2 படகுகளில் 23 அகதிகள் சென்றனர். ஆனால் அந்த படகுகள், துருக்கியில் பொத்ரும் நகருக்கு அருகே கவிழ்ந்து விட்டன. அவற்றில் 9 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். மற்றவர்கள் நடுக்கடலில் பலியாகினர். பலியானவர்களில் 5 பேர் பச்சிளங்குழந்தைகள்.அப்படி பலியான ஒரு பிஞ்சுக் குழந்தையின் உயிரற்ற உடல், கரை ஒதுங்கிக்கிடந்த கோர காட்சி உலக நாடுகளையே ஒரு கணம் அதிரவைத்தது.அந்தக் குழந்தையின் பெயர் அய்லான். 

அய்லானின் தந்தையின் பெயர் அப்துல்லா என்று துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், ஷேனு என்று அழைக்கப்படும் அவர், இந்த படகு விபத்தில் தனது இரு மகன்கள் மற்றும் மனைவியை இழந்துள்ளார். மிகுந்த உருக்கத்துடன் தனது குழந்தைகள் மனைவி இறந்து பற்றி துருக்கி செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், எனது மனைவியின் கைகளை நான் பிடித்துக்கொண்டிருந்தேன். ஆனால், எனது கைகளில் இருந்து குழந்தைகள் தவறிவிட்டனர். அந்த சிறிய படகை நாங்கள் இறுக்கமாக பிடித்து இருந்தோம். சிறிது நேரத்தில் படகு கவிழ்ந்துவிட்டது. மிகவும் இருட்டாக தென்பட்டது. அனைவரும் கூக்குலிரட்டனர்” என்று மிகவும் உருக்கத்துடன் கூறினார்.

 சிறுவன் அய்லான் குர்டி படகில் பயணம் செல்வதற்கு முன் துருக்கி கடற்கரையில் தனக்கு பிடித்தமான கால்பந்து விளையாடும் போது எடுக்கபட்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இறந்த் இந்த சிறுவனின் புகைப்படம் மத்திய தரைக்கடல் அகதிகள் நெருக்கடியின் அடையாளமாக உள்ளது.





சிறுவன் இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன் கால்பந்து விளையாடிய புகைப்படம்


                                                       Ya Allah please save the People :(


This is something that boils my blood. How helpless are we, sitting in homes my Allah. How can I help them my Lord. I can only pray for these innocent people. Ya Allah protect them, protect the women and their children. My Allah give strength to all men out there. Ameen.

A Syrian toddler, Aylan Kurdi, washed up dead on a beach in Turkey is one of many victims of the crisis that has befallen our brothers and sisters in faith. More than 2,600 people have died trying to cross the Mediterranean to Europe this year alone. How many more deaths will it take before we wake up? Muslims all over the globe are suffering. We need supplications but we also need action