Tuesday, June 17, 2014

மூளைச்சாவு அடைந்தவரின் இருதயம் இளம்பெண்ணுக்கு பொருத்தப்பட்டது! (படங்கள்)

Posted Date : 07:46 (17/06/2014)Last updated : 11:57 (17/06/2014)
சென்னை: விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இருதயம் 13 நிமிடத்தில் கொண்டு செல்லப்பட்டு இளம் பெண்ணுக்கு பொருத்தப்பட்டது.

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள பழையனூரை சேர்ந்தவர் ராஜலெட்சுமி. கிராம சுகாதார செவிலியராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் லோகநாதன் (வயது 27). இவர் என்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். வேலை கிடைக்கும் வரை வருமானத்திற்காக டிரைவர் வேலை செய்துவந்தார்.

கடந்த 11 ஆம் தேதி லோகநாதன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, பட்டாளம் என்ற பகுதியில் டேங்கர் லாரி மோதியதில் படுகாயம் அடைந்தார். உடனே அவர் செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், நேற்று காலை 6.55 மணிக்கு லோகநாதன் மூளைச்சாவு அடைந்தார்.

இதனையடுத்து அவருடைய உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானம் செய்ய முடிவெடுத்தனர். மும்பையை சேர்ந்த ஓய்வுபெற்ற கப்பல் என்ஜினீயர் அஸ்பி வினோகர் நேம்ஜி என்பவரின் மகள் ஹவோபியா (21) சில ஆண்டுகளாக இருதய நோயால் அவதிப்பட்டு அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஹவோபியாவிற்கு இருதய தானம் பெறுவதற்காக அவருடைய குடும்பத்தினர் எதிர் நோக்கியிருந்தனர்.

லோகநாதனின் இருதயத்தை ஹவோபியாவிற்கு வழங்க முடிவானது. இருதயத்தை விரைவாக கொண்டு செல்வது குறித்து டாக்டர்கள் போலீசாருடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் நேற்று மதியம் 2 மணிக்கு லோகநாதனின் உடல் உறுப்புகள் அரசு மருத்துவமனையில் பிரித்து எடுக்கப்பட்டது. இதில் 20 டாக்டர்கள் ஈடுபட்டனர். மாலை 5.35 மணி அளவில் லோகநாதனின் உடலில் இருந்து இருதயம் பிரித்தெடுக்கப்பட்டது.

மாலை 5.45 மணி அளவில் அரசு மருத்துவமனை வளாகத்திலிருந்து மின்னல் வேகத்தில் இருதயம் ஆம்புலன்சு மூலம் அடையாறு மலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 'சென்னையில் ஒரு நாள்' பட பாணியில் வழியெங்கும் போக்குவரத்து போலீசார் நின்று வயர்லெஸ் மூலம் போக்குவரத்தை சீர்படுத்தினர்.

ஆம்புலன்சு செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு சரியாக 13 நிமிடம் 22 வினாடிகளில் மலர் மருத்துவமனையை அடைந்தது. அங்கு டாக்டர்கள் குழுவினர் இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் ஹவோபியாவிற்கு பொருத்தினர்.

லோகநாதனின் 2 கண்கள் எழும்பூர் கண் மருத்துவமனைக்கும், 2 சிறுநீரகங்கள் அடையாறு மலர் மருத்துவமனைக்கும், கல்லீரல் வேலூர் அரசு மருத்துவமனைக்கும், தோல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள ரைட் மருத்துவமனைக்கும் தானமாக கொடுக்கப்பட்டது. லோகநாதன் உடல் உறுப்புகள் மூலம் 7 பேர் மீண்டும் மறுவாழ்வு பெற முடியும்.

இது குறித்து லோகநாதனின் தாயார் ராஜலெட்சுமி கூறும்போது, "என் மகனை காப்பாற்ற முடியாது என்று டாக்டர்கள் கூறியதும் இடி விழுந்தது போல் இருந்தது. அவன் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் அவனை நேரில் காணமுடியும் என்று கருதினேன். எனவே, அவனது உடல் உறுப்புகளை தானமாக கொடுப்பதற்கு முன்வந்தேன். என்னுடைய மகன் உடல் உறுப்புகள் மூலம் மற்றவர்கள் உயிர்வாழ வேண்டும்" என்றார்.

2008 ஆம் ஆண்டு மூளைச்சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்தியது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை 76 இருதயங்கள், 861 சிறுநீரகங்கள், 37 நுரையீரல்கள், 1 கணையம், 500 இதய வால்வுகள், 730 கண்கள் மற்றும் 1 தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டுள்ளன.

இதில் 611 சிறுநீரகங்கள், 378 கல்லீரல்கள், 66 இதயங்கள், 28 நுரையீரல்கள் சென்னையில் தானமாக பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் தான் உடல் உறுப்புகள் தானம் செய்வதில் முதலிடத்தில் உள்ளது.
லோகநாதனின் இருதயம் வெற்றிகரமாக இளம்பெண் ஹவோபியாவுக்கு பொருத்தப்பட்டதாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், ''மாற்று இருதயம் பொருத்தப்பட்ட ஹவோபியா நலமுடன் உள்ளார்.

15 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு, மாற்று இருதயம் பொருத்தும் சிகிச்சையை செய்தது. மாற்று இருதயம் பொருத்தப்பட்ட பெண் இன்னும் 5 நாட்களுக்கு ஐ.சி.யூ.வில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பார். விரைவில் ஹவோபியா நலமுடன் வீடு திரும்புவார்" என்றனர்.

Tuesday, June 10, 2014

வெளிநாட்டு வாழ்க்கை

வெளிநாட்டு வாழ்க்கை


தினார்கும் ரியாலுக்கும் ரிங்கிட்டுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கிக் கிடக்கும் மீன் குஞ்சுகள் நாங்கள்......

பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு
குதூகளிக்க முடியாமல் தங்களின் வாழ்த்துக்களை மனம் முழுக்க சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிட்டு கொஞ்சி மகிழ நேரில் இல்லாத காற்றலைகள் நாங்கள்......


இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம் தன் பெற்றக்குழந்தையை நெஞ்சுருகக் கட்டித்தழுவ முடியாதொரு துர்பாக்கியசாலிகள் நாங்கள்...

கம்ப்யூட்டர் , ஸ்கைப். போனிலும் சொந்த பந்தங்களின் குரல் கேட்டு கேட்டு எங்கள் பாசம் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது... தொலைதூர பாசம் செய்தே/காட்டியே தொலைந்து போனவர்கள் நாங்கள்...

நான் இங்கே நல்லா இருக்கேன். என்று எப்போதும் சொல்லும் இயற்கை நிலை குரலுக்கு சொந்தக்காரர்கள் நாங்கள்...

வியர்வையில் நாங்கள் வேலை செய்து துவண்டாலும் விடுமுறையில் ஊருக்கு போகும் முன் சென்ட் வாசனை திரவியங்கள் வாங்க மறப்பதில்லை நாங்கள்...(எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க...)

உனக்கென்ன! விமானப்பயணம், வெளிநாட்டு ராஜ வாழ்க்கை என்று ஊருக்கு போனதும் உள்ளூர் வாசிகள் எங்களை பார்த்து விடும் பெருமூச்சு வளைகுடா நாட்டின் அரபி நாட்டு வெப்பத்தை விட சற்று அதிகமாகவே சுடுகிறது! (இவர்கள் பேச்சி)
வெளிநாட்டு மூட்டை பூஜ்ஜி கடியை விட இவர்கள் கடியைதான் தாங்க முடியவில்லை
கம்ப்யிட்டர்க்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள்,
நாங்கள் கலப்பை பிடிக்கவில்லை ஆனால் நாங்களும்
களைத்துத்தான் போகிறோம்...


எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள்...
வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள் நாங்கள்...
திரைகடலோடி திரவியம் தேடும் திசைமாறிய பறவைகள் நாங்கள்...


ஆரம்பத்தில் முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதப்பட்டோம் எங்களுக்கே தெரியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு செய்திருக்கின்றோம்...இப்போதுதான் புரியத்துவங்கியது சேர்ந்தே நரைக்கவும் துவங்கியது...

நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை! வாலிபத்தை!!
இழப்பீடு கிடைக்காத இழப்பு இது , நஷ்ட்டஈடு கிடைக்காத நஷ்ட்டம் இது...


, அப்பாவின் அன்பு, குழந்தையின் மழலை, நண்பர்களுடன் அரட்டை இப்படி வீட்டு சாப்பாட்டுக்கு ஏங்கி தவிக்கும் எங்கள் நாக்கு

இங்க உள்ள பர்கர், பீசா, சன்விஜ், சாப்பிட்டு சாபிட்டு எங்கள் நக்கும் செத்து போச்சி பசி கொடுமைக்காக சாப்பிடுக்றோம்.

ஏதோ எங்கள் உடம்பில் கொஞ்சம் ஓட்டி கொண்டு இருக்கும் ரெத்தத்தை கூட மூட்டை பூச்சி குடித்து விடுகிறது .

எத்தனையோ இழந்தோம்.....
எல்லாவற்றையும் இழந்த நாங்கள் இன்னும் இங்கே ஏன் இருக்கின்றோம்...


இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதாலா?
இல்லை இழப்பிலும் சுகம் கண்டுகொண்டதாலா?"


சொந்த மண்ணில் சொந்தங்களோடு சோறு திண்பவன்
......யாரடா ? இருந்தால் அவனே சொர்க்கம் கண்டவனடா!


உங்கள் விரல் தொடும் தூரத்தில் நான் இல்லை என்றாலும் !' உங்கள் மனம் தொடும் தூரத்தில் நான் இருப்பேன் !

நீங்கள் இருப்பது தொலைவில் தான் ஆனால் என் இதயம் மட்டும் உங்களுடன் பேசிக்கொண்டிருகின்றது!

                                                    -   புஷ்ரா கனி - 

Thursday, June 5, 2014

Follow this Rule's

இந்த ஐந்து வீதிகள Follow பண்ணா கல்யாணம் ஒரு அருமையான விஷயம் 

முதல் வீதி ....First rule ...

அதிகாரத்தில் கை வைக்க கூடாது 
"No power of the house"
வரவு செலவு எல்லாத்தையும் அவங்களயே பாக்க விட்ரனும் 
நாம பாத்தா நமக்கு தான் தேவை இல்லாத Tension

Second Rule ...

அடிப்பெனு மிரட்ட கூடாது
"No unwanted scaring"

ஏன்னா காலம் காலமா பொண்ணுங்க Kovai Sarala படம் பார்த்து தெளிவா இருக்காங்க , அவங்கள தேவை இல்லாம அடிப்பெனு சொல்லி அடி வாங்கிக்க கூடாது

Third rule ...

அவங்களால என்ன சமைக்க முடியுமோ அத சமைக்க சொல்லி சாப்புடனும்
நாம அதுக்கு மேல கேட்டா அவங்க சமையல் குறிப்புக்கு Internet போவாங்க , அப்புறம் அதை நாம தான் சாப்புடனும்

And 4'வது Rule ....

எக்காரணம் கொண்டும் ஆயுதம் எந்தக் கூடாது ..No weapons ...
ஏன்னா பெண்கள் கிட்ட தான் கரண்டி பூரி கட்டை போன்ற
பயங்கர ஆயுதங்கள் இருக்குனு Statistics சொல்லுது

And then 5th ...இது தான் ரொம்ப முக்கியாமனது
...

ஒரு வேல சண்டை வந்தா தப்பு அவங்க மேலே இருந்தாலும்
கூச்சமே படாம Sorry கேட்ரனும் ...
மானம் ரோசம் அறவே கூடாது .