Monday, April 6, 2020

தொடர்ந்து எழுந்து நிற்கிறேன்.

என்னை நினைத்து யாரும் அழுது விட வேண்டாம்
எனக்காக நானே அழுவதில்லை இப்போது
என்னை நேசிக்கும் வாய்ப்பை
யாரிடமும் நான் கொடுத்தது இல்லை.
யாரோ ஒருவர் தூக்கியெரியும் வரை
அவர்களிடத்தில் நான் இருந்ததில்லை.
இது தான் நீயென என்னை
வரையறுக்கும் தகுதி எவரிடமும் இல்லை.
என் சிரிப்பிற்கு யாரிடமும்
விளக்கம் கொடுக்கும் அவசியம் இருந்ததில்லை.
என் முடிவுகள் தவறென்று
எவராலும் என்னைத் தீர்மானிக்க முடிவதில்லை.
ஏன் அழுகிறேன் என்று
எவரும் என்னிடம் கேட்க நினைத்ததில்லை.
என் கோபத்திற்கான காரணம்
எதுவென்று யாரும் தெரிந்து கொள்ள நினைப்பதில்லை.
நான் அழுதிருக்கிறேன்.
அனாதையாக நிறுத்தப்பட்டு இருக்கிறேன்.
புறக்கணிக்கப்பட்டு இருக்கிறேன்.
வலிக்க வலிக்க கொன்று இருக்கிறார்கள்.
வாய் விட்டு அழ முடியாமல் கதறி இருக்கிறேன்.
தோற்றும் இருக்கிறேன்.
தொடர்ந்து எழுந்து நிற்கிறேன்.
இப்பொழுதெல்லாம் இவர்களில் யாரையும்
நான் நம்புவதும் இல்லை.
நான் சிரிக்கும் போது
அவர்கள் அழத் துவங்கி இருக்கிறார்கள்.
வாழ்க்கை மாறும் என்று நான் காத்திருந்ததில்லை.
அதை மாற்ற முடியும் என்று மாற்றிக் காட்டும் வரை,
இங்கு எதுவுமே மாறாது
இப்போதும் சிரிக்கிறேன் ......
என் சிரிப்பைக் கண்டு
யாரெல்லாம் அழுது கொண்டு இருப்பார்களோ தெரியவில்லை........
அன்புடன் உங்க கனிராஜா

No comments: